Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
R.Maheshwary / 2021 ஜூலை 20 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மந்திரிதன்ன பிரதேச பண்டிதாகும்புர கிராமத்தில், 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தொடர்பில், அவரது பெற்றோரால் இராகலை பொலிஸ் நிலையத்தில் நேற்று (19) இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமி விசேட தேவையுடையவர் என்றும், இவர் தற்போது வைத்திய சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சிறுமி விசேட தேவையுடையவராக இருப்பதால், அவரிடம் முறையான விசாரணைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக தெரிவித்துள்ள இராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த சமரக்கோன், விசேட பொலிஸ் குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பண்டித்தாகும்புர பிரதேச விகாரையின் பிக்குவிடம் தெரிவித்துள்ள நிலையில், பிக்குவின் ஆலோசனைக்கமையவே, பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago