2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விஜயத்தை முடித்து நாடு திரும்பினார் அதானி

Freelancer   / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விசேட வர்த்தகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானி, இன்று (26) மாலை 4.30 மணியளவில் இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

கௌதம் அதானி மற்றும் அவரது வர்த்தக ஆலோசகர்கள் 10 பேர், இரண்டு தனியார் ஜெட் விமானங்களில் கடந்த 24ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைந்தனர்.

இலங்கையின் வர்த்தக வாய்ப்புகள் தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிரேஷ்ட அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், மன்னார் பகுதியில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் இடங்களில் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

இவர்களை ஏற்றிச் சென்ற முதலாவது விமானம் இன்று (26) மாலை 4.30 மணிக்கும் மற்றைய விமானம் 04.40 மணிக்கும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X