2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விஷவாயு கசிவு: 13 பேர் பலி; 3 ஆயிரம் பேர் பாதிப்பு

Editorial   / 2020 மே 07 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திராவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விசாகப்பட்டினம் ஆர்ஆர் வெங்கடபுரம் கிராமத்தில் உள்ள குறித்த இரசாயன தொழிற்சாலையில் இன்று (07) அதிகாலை விஷவாயு கசிவு ஏற்பட்டது. 

இது, அங்கிருந்து 3 கிலோமீற்றர் தூரத்துக்கு பரவியதால் அப்பகுதிவாசிகள் இடையே, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வீதிகளில் சென்ற சிலர் மயங்கி விழுந்தனர்.

இவ்வாறு 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  பலர் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 
இதன்போது,  குழந்தை உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

சம்பவ இடத்தில் மீட்பு பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர், பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X