2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெடிமருந்துடன் ஒருவர் கைது

Nirosh   / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு நகரப் பகுதியில் சட்டவிரேதமான வெடிமருந்து ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த முல்லைத்தீவு பொலிஸார், மாவட்ட செயலகத்துக்கு முன்னாள் நின்றிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்துள்ளனர். 

இதன்போது அவரிடம் இருந்து சட்டவிரோத வெடிமருந்து மற்றும் விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்ட கசிப்பு என்பன இருந்துள்ளதை பொலிஸார் கண்டறிந்து நபரை கைது செய்துள்ளனர். 

சுதந்திரபுரம் உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டிருந்த நபரிடமிருந்து 200 கிராம் வெடிமருந்து மற்றும் 1,500 மில்லிலீற்றர் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் விசாரணை செய்து வருவதோடு, நாளை (25) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .