2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வெளிநாடு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

Freelancer   / 2021 ஒக்டோபர் 16 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு இடம்பெறும் டிசெம்பர் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகாரபூர்வ அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் வெளிநாடு செல்ல வேண்டாம் என்று ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அனைத்து அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக ஆக்குவதற்கு அனைத்து தரப்பினரும் முடிந்தவரை பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காக ஜனாதிபதியின் செயலாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டுக்கான (2022) அரசாங்க வரவு செலவுத்திட்ட முன்மொழிவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அடுத்த மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

அன்றிலிருந்து வரவு செலவுத்திட்ட விவாதம் நடைபெற்று இறுதி வாக்கெடுப்பு டிசெம்பர் 10 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X