2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஹரீன், மனுஷவை நீக்க நடவடிக்கை

Editorial   / 2022 மே 26 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து,  அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை  நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா,  நேற்று (25) தெரிவித்தார். 
 
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

கட்சியின் கூட்டுத் தீர்மானத்தை மீறி,  ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் அதிகாரம் வழங்குவதற்காக இருவரும் வெளியேறியுள்ளனர் என்று தெரிவித்த நளின் எம்.பி,  அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு கட்சியின் உயர்பீடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

நாட்டை நிர்வகிப்பதற்கான பொறுப்பை ஏற்க தாம் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர்,  ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாக்கும் அரசாங்கத்துக்கு அதிகாரம் வழங்குவதற்கு தாம் விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X