2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காணிகள் குறித்து ஆராய கள விஜயம்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணலை, குச்சவெளிப் பிரதேசத்தின் வடலிக்குளம் மற்றும் சல்லிமுனை விவசாயக் காணிகளில் காணப்படுகின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றைத் தீர்த்துவைப்பதற்காக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், அப்பகுதிகளுக்கு இன்று (30) கள விஜயம் மேற்கொண்டார்.  

குச்சவெளி பிரதேச செயலாளர் கே. குணநாதனும் அவருடன் சென்று காணிகளை பார்வையிட்டு, குறை - நிறைகளையும் கேட்டறிந்தார்கள்.

இதன்போது, அப்பகுதியிலுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடினார்கள்.

குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.முபாரக், பிரதேச சபை உறுப்பினர் மீஸான், பிரதேச சபை  முன்னாள்  உறுப்பினர் ஆசிக் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .