2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன? 17க்கு முன்னர் பதில்

Editorial   / 2023 ஜனவரி 04 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இலங்கை இராணுவத்திடம் தமிழ்மிரர்  ஊடகவியலாளர் பா.நிரோஸால் கோரப்பட்ட தகவல்களுக்கு, “பொறுப்பு வாய்ந்த இராணுவம் என்கிற வகையில் முழுமையான, சரியான தகவல்களை இம்மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக” இலங்கை இராணுவம் சாட்சியம் வழங்கியது.

1111/2022 என்கிற இலக்கத்தைக் கொண்ட தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மேன்முறையீடு, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் உபாலி அபேவர்தன தலைமையில்  இன்று (04) பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே இலங்கை இராணுவம் இவ்வாறு தெரிவித்திருந்தது.

தகவலறியும் ஆணைக்குழு முன்பாக இலங்கை இராணுவம் வழங்கிய சாட்சியத்தின் முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள தமிழ்மிரருடன் இணைந்திருங்கள்...


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .