2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொது மக்களுக்கு அதிர்ச்சியான செய்தி

Freelancer   / 2022 டிசெம்பர் 03 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த ஆண்டு ஜனவரியில் மின் கட்டணம் 70 சதவீதம் உயர்த்தப்பட்டால், அது மக்களுக்கு கட்டுப்படியாகாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின்  தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு எவ்வித அனுமதியும் வழங்க முடியாத நிலை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின் கட்டணம் அதிகரித்தால், இந்த ஆண்டு ஜனவரியில் 1,000 ரூபாயாக இருந்த மின்கட்டணம், அடுத்த ஆண்டு ஜனவரியில் 3,000 ரூபாயாகவும், 2,000 ரூபாயாக இருந்த மின்கட்டணம் 6,300 ரூபாயாகவும், 10,000 ரூபாயாக இருந்த மின்கட்டணம் 32,000 ரூபாயாக உயரும் என அவர் கணித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X