2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொதுப் பயன்பாடுகள் ஆணையாளர் அதிரடி அறிவிப்பு

Freelancer   / 2023 ஜனவரி 28 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் இலங்கை மின்சார சபை செயற்படத் தவறியமை தொடர்பில் எதிர்வரும் இரண்டு நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, இன்று (28) தெரிவித்தார்.

உயர்தர பரீட்சைக் காலத்தில் தொடர்ச்சியான மின்சார விநியோகம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வலுச்சக்தி அமைச்சின் எந்தவோர் அதிகாரிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் அங்கிருந்த மேலதிக செயலாளரிடம் சட்டம் குறித்து விளக்கியதாகவும் ரத்நாயக்க தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலுக்கு மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக செயலாளர் ஒருவரின் பங்கேற்பே இந்தப் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .