2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் கூடியது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு

Freelancer   / 2023 ஜனவரி 07 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் சனிக்கிழமை (07) காலை நடைபெற்றது.

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.கலையரசன், உட்பட வடக்கு கிழக்கிலுள்ள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற , மாகாண சபை  உறுப்பினர், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், கட்சியின் இளைஞர் அணியினர்  உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தின் ஆரம்பத்தில் கட்சிக்கொடி தமிழரசுக் கட்சியின் தலைவரால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கம் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மத்தியகுழு கூட்டம் ஆரம்பமாகியதுடன் இதில் கட்சியின் பல முக்கிய விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல் விடயங்கள், பங்காளிக் கட்சிகளின் விடயதானங்கள் உள்ளிட்டவை கலந்துரையாடப்படவுள்ளதுடன், பல முக்கிய தீர்மானங்களும் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டம் நடைபெறுகின்ற போது, மண்டபத்துக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

- கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான், வ.சக்தி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .