2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தியாக தீபம் திலீபனின்…

Editorial   / 2021 செப்டெம்பர் 26 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தியாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம் (26 வீரச்சாவடைந்த நேரமான 10.48 க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலேயே நினைவேந்தல் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஈகச்சுடரினையும் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

 1987 ஆண்டு புரட்டாதி மாதம் 15 ஆம் திகதி 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் நீராகாரம் ஏதுமின்றிய அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு புரட்டாதி 26 ஆம் திகதி வீரச்சாவினை திலீபன் தழுவியிருந்தார்.( படங்களும் தகவலும்: ஸ்ரீதரன் எம்.பியின் அலுவலகம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .