2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கண்டியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 10 , பி.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னொருவ பாலத்துக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 துப்பாக்கி ரவைகளும் வெற்று துப்பாக்கி ஒன்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கபட்டு, பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய்யே இந்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட ரவைகளுள்  எம். 16 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக் கூடிய 18 ரவைகளும் டி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக் கூடிய 7 ரவைகளும் எஸ்.எல்.ஆர் துப்பாக்கிக்கு பயன்படுத்தக் கூடிய 5 ரவைகளும் எப்.என். ரைபிளுக்கு பயன்படுத்தக் கூடிய 3 ரவைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .