2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

கந்தகெட்டிய பாடசாலையை சேதப்படுத்திய காட்டு யானைகள்

Editorial   / 2025 நவம்பர் 02 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்டம், கந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கந்தகெட்டிய ​ஆரம்ப பாடசாலைக்குள் சனிக்கிழமை (01) நுழைந்த காட்டு யானைகள் கூட்டம், பிரதான வாயில், அறிவிப்பு பலகைகள், கொன்கிரீட் தூண்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார்  தெரிவித்தனர்.

ரந்தெனிகல வனப்பகுதியிலிருந்து உணவு தேடி வந்த நான்கு  காட்டு யானைகள் கூட்டம், பாடசாலையின் பின்புறம் இருந்து பாடசாலைக்குள் நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மைதானத்தில் சிறிது நேரம் கழித்த காட்டு யானைகள் கூட்டம், மீண்டும் வெளியேற முயன்றது, பிரதான வாயில், அறிவிப்பு பலகைகள் மற்றும் கொன்கிரீட் தூண்களை சேதப்படுத்தி சேதத்தை ஏற்படுத்தியது, பின்னர் பிரதான வாயிலிலிருந்து வெளியேறி பிரதான சாலையை அடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், வனவிலங்கு அதிகாரிகள் வந்து தீ வைத்து, காட்டு யானைகள் கூட்டத்தை ரன்தெனிகல சரணாலயத்திற்குள் விரட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த காட்டு யானைகள் கூட்டம் பாடசாலைக்கு அருகிலுள்ள வாழைத் தோட்டத்தையும் அழித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X