2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சபை அமர்வுகளில் சில உறுப்பினர்கள் பற்கேற்பதில்லை

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் சில உறுப்பினர்கள் சபை அமர்வுகளில் பங்கு
பற்றுவதில்லை எனத் தெரிவித்த ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் உறுப்பினர் அழகமுத்து நந்தகுமார்,இதனால் அவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் குறித்து, சிக்கல் ஏற்படும் நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், சில நகரசபை உறுப்பினர்கள் பல மாதங்களாக சபை அமர்வுகளுக்கு வருவதில்லை. எனவே இவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் குறித்து பிரச்சினை ஏற்பட்டால், யார் பொறுப்பு கூறுவது என கேள்வி எழுப்பினார்.


சில 3 மாதங்களுக்கு ஒரு தடவை சபை அமர்வுகளில் பங்கேற்று, பின்னர் விடுமுறை கடிதங்களை அனுப்புகின்றனர். ஓர் உறுப்பினர் அடிக்கடி இந்தியா செல்வதாக கூறிச் செல்கிறார். அவர் அவ்வாறு இந்தியா செல்வதாயின் எதற்கு உறுப்பினர் பதவி? அவருக்கு சபை அமர்வுகளில் பங்கேற்க முடியாவிடின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகி இன்னொருவருக்கு வாய்ப்ப வழங்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .