2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

டயகம சிறுமியின் சடலம் பேராதனை செல்லும்

Editorial   / 2021 ஜூலை 30 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி சந்ரு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த 16 வயதான  சிறுமி ஹிஷாலினியின் சடலம்,   தோண்டி எடுக்கப்படுகிறது.

நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி லுசாகா குமாரி தர்மகீர்த்தி  முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  இதனை மூன்று சட்ட வைத்தியர்கள் கண்காணிக்கின்றனர்.

இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட சடலம், பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில், பேராதனை போதனா வைத்தியசாலைக்கு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்படும்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X