Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீபாவளி தினத்தை முன்னிட்டு, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முற்பணமாக ரூபாய் 15,000 ரூபாயை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து, பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொலைநகல் மூலமாக வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,நாளுக்கு நாள் பொருட்களின் விலையேற்றம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைப்பு முறையான சம்பளம் இன்மை என்பவற்றின் விளைவாக அசௌகரியமான சூழ்நிலையிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை நடாத்திச் செல்கின்றார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் மனிதாபிமான ரீதியில் பெருந்தோட்ட நிர்வாகங்களும்
நடந்துகொள்ளவேண்டும். ஆகவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்தம் அறவிடும் வகையில், தீபாவளி முற்பணமாக, 15,000 ரூபாயை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
37 minute ago
3 hours ago
4 hours ago