2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாணத்தில் அறுபதாயிரத்தை நெருங்கும் தொற்றாளர்கள்

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் ஆஸிக்

மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அறுபதாயிரத்தை நெருங்குவதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று (12) வரை 59,408 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கண்டி மாவட்டத்தில் 106 தொற்றாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 104 தொற்றாளர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 34 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் இதுவரை 29,719 தொற்றாளர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 12,665 தொற்றாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 17,024 தொற்றாளர்களும் என 59,408 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாணத்தில் இதுவரை 1,740 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் இதில் கண்டி மாவட்டத்தில் 884 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 427 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 429 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X