2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மரங்கள் அகற்றப்பட வேண்டும்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 26 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரா.கமல்

தோட்டக்  குடியிருப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மரங்களை, தோட்ட நிர்வாகங்கள் அகற்ற முன்வருவதில்லையென, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை கஹவத்தை, ஓபாவத்தை தோட்ட, திம்புல்வல பிரிவில் தோட்டக்
குடியிருப்புகள் மீது, அரச மரம் முறிந்து விழுந்ததால், தோட்டக் குடியிருப்புக்கள் முற்றிலும்
சேதமடைந்த இடத்திற்கு விஜயம் செய்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின், கவனத்துக்கு கொண்டுச் சென்று, கூடிய விரைவில் மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதாகவும் அவர்  மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X