2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

யுவதியை தேடும் பணிகள் தொடர்கின்றன

R.Maheshwary   / 2021 ஜூலை 22 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

 பத்தனை- டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து காணாமல் போன யுவதியை தேடும் பணிகள் இன்று (22) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

எனினும், இதுவரை குறித்த யுவதி தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டெவோன் நீர்வீழ்ச்சியில் நீரின் வேகம் அதிகரித்த காரணத்தினால் நேற்று (21) தேடுதல் நடவடிக்கை பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று (22) காலை முதல் இராணுவத்துடன், பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து யுவதியை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர் வீழ்ச்சியின் அடிவாரத்தில் கடற்படை சுழியோடிகள் மேற்கொண்டு வரும் தேடுதலில், இதுவரை எந்தவித தடயங்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

17ஆம் திகதி நண்பர்கள் மூவருடன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்ற சந்தர்ப்பத்தில் கடந்த வழுக்கி வீழ்ந்து காணாமல் போன,லிந்துலை, லென் தோமஸ் தோட்டத்தைச் சேர்ந்த 19 வயது யுவதியுடன் சென்ற நண்பர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .