2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விறகு சேகரிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

R.Maheshwary   / 2022 ஜூலை 06 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு  தனராஜா

பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இந்துகலை மேற்பிரிவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இன்று காலை விறகு சேகரிக்கச் சென்ற 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று காலை விறகு சேகரிக்கச் சென்ற வேளையில் தீடீரென மரணமடைந்துள்ள நிலையில், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் சடலத்தை  கண்டு பல்லகெடுவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .