2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கல்

Niroshini   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். தில்லைநாதன்

தொண்டைமானாறு - சந்நிதியான் ஆச்சிரமத்தால்  வடமராட்சி பருத்தித்துறை  -  கொடிகாமம்  தனியார் பஸ் சேவைச் சங்கம் சார்ந்த சாரதி, நடத்துனர்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.  

கொவிட் - 19  இடர்கால நிவாரண உதவித் திட்டத்துக்கு அமைவாக பருத்தித்துறை, கரவெட்டி பிரதேச செயலாளர்களின் நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட  வடமராட்சி தனியார் பஸ் சேவைச் சங்கம்  பருத்தித்துறை  - கொடிகாமம் சார்ந்த  சாரதிகள், நடத்துனர்களைச் சேரந்த 35 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக  75,000 ரூபாய் பெறுமதியான அத்தியவசிய உணவுப் பொருள்களான அரிசி, மா, சீனி, பருப்பு உள்ளடங்கலாக வழங்கப்பட்டன.

வணக்கத்துக்குரிய மோகனதாஸ் சுவாமிகள்  அவர்களால், சந்நிதியான்  ஆச்சிரமத்தில் வைத்து  வடமராட்சி - பஸ் சேவைச்சங்கம்  759 பாதை இலக்க நிர்வாகிகளிடம், நேற்று முன்தினம் (28), இவை கையளிக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .