2024 மார்ச் 28, வியாழக்கிழமை

யாழில் அதிசய கோழிக் குஞ்சு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

அச்சுவேலி - காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பொரித்துள்ளது.

மகாராஜா கௌரி என்ற குடும்பப் பெண் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார். கோழி வளர்ப்பினையே அவர் ஜீவனோபாயமாக கொண்டு வருகின்றார்.

இவரது வீட்டில் ஆறு கோழிக் குஞ்சுகள் பொரித்த நிலையில், அதில் ஒன்று நான்கு கால்களுடன் காணப்படுகின்றது.

ஏனைய கோழிக் குஞ்சுகளைப் போல குறித்த கோழிக் குஞ்சும் சுறுசுறுப்பாக காணப்படுகின்றது.

குறித்த கோழிக்குஞ்சினை பிரதேசத்தில் உள்ள மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X