2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தம்புள்ளை வாகன விபத்தில் மூவர் படுகாயம்

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 13 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

தம்புள்ளை 40ஆம் மைல்கல் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் மூவர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மாத்தளையிலிருந்து தம்புள்ளை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் ஹிங்குரக்கொடையிலிருந்து கண்டி நோக்கி சென்று கொண்டிருந்த வேன் ஒன்று மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டதாக தம்புள்ளை பொலிஸார் கூறுகின்றனர்.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுல் இருவருடைய நிலைமை கவலைக்குரியதாக உள்ளதாகவும் தம்புள்ளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X