2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை பலி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

புத்தளம் -  கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிள் மீது டிப்பர்ரக வாகனமொன்று மோதியதாலேயே இந்த  விபத்து இடம்பெற்றுள்ளது.

தளுவை பாலக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான பாலித சித்திரசேன (வயது 46)  என்பவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவர். இவர் மதுரங்குளி கமநலசேவை அலுவலகத்தில் தென்னை அபிவிருத்தி அதிகாரியாகக் கடமையாற்றி வருகிறார்.

நாகவில்லு மற்றும் பாலாவிக்குமிடையிலான  பிரதேசத்தில்
வென்னப்புவ நோக்கிப் பயணித்த டிப்பர்ரக லொறி, மதுரங்குளியிலுள்ள தனது அலுவலகத்திலிருந்து  மோட்டார்  சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

டிப்பர்ரக  வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X