2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சமுர்த்தி வங்கியில் திருட்டு

Super User   / 2011 ஜூன் 27 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

ஆனமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகச்சி, எதுன்கொட வீதியிலுள்ள புரானகம சமுர்த்தி வங்கியின் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஆனமடு பொலிஸில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை வங்கியை திறந்தபோது வங்கியின் பின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை வங்கி முகாமையாளர் கண்டுள்ளதையடுத்தே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மூடிய பின்பு இன்று தான் வங்கி திறக்கப்பட்டுள்ளது. வங்கியிலுள்ள கணனி மற்றும் அதனுடன் தொடர்பான பொருட்களும் காணாமல் போயுள்ளதாக முகாமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X