2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

படம் மாறிய அனுதாப பதாகை

Editorial   / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த   வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே இன்று (07) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 83 ஆகும்.

அவருக்கு, அனுதாபம் தெரிவித்து வடமேல் மாகாணத்தில் பல இடங்களில், அனுதாப பதாகை வைக்கப்பட்டுள்ளன.

வாரியபொல பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் உள்ளிட்ட பணியாட் தொகுதியினர், அவரது இறப்புக்கு அனுதாபம் தெரிவித்து பதாகை வைத்திருந்தனர்.

இந்த பதாகையில்,  வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவின் படத்துக்குப் பதிலாக,  ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸமில்லின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பதாகையில் பெயர் சரியாகவே எழுதப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X