2025 ஜூலை 21, திங்கட்கிழமை

நிர்க்கதியான மக்களுக்கு உதவ முன்வாருங்கள்: சிவசக்தி ஆனந்தன்

Kogilavani   / 2014 மே 05 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'வவுனியா மாவட்ட மக்கள் நடந்து முடிந்த மாகாண சபைத்தேர்தலில் ஆளங்கட்சிக்கு   ஆதரவளிக்காததன் காரணத்தினால் அம்மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை பழிவாங்குகின்றது' என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

சுழல் காற்றினாலும் மழையினாலும் பதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள வவுனியா மாவட்ட வெண்கலச் செட்டிகுளம் பிரதேச பிரிவுக்கு உட்பட்ட கன்னாட்டி கிராமத்தினை சேர்ந்த 57 குடும்பங்களை ஞாயிற்றுக்கிழமை (04) பார்வையிட சென்ற போதே மேற்கண்டவாறு அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மீள்குடியேற்றக் கிராமமான கன்னாட்டியில் 108 குடும்பங்களை சேரந்த 337 பேர் வாழ்ந்து வருகின்றனர். மன்னார் ஆயரின் ஏற்பாட்டில் து.சு.ளு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக கொட்டகைகளில் மலசல கூடம், போக்குவரத்து வசதிகள், மின்சாரம் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலேயே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்ந மீள்குடியேற்ற மக்களுக்கு இந்திய வீட்டுத்திட்ட நிதியின் கீழ் வீடுகள் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டிருந்த போதிலும் இறுதியில் அது வழங்கப்படாமல் ஆறு ஆண்டுகளாக இந்த கிராம மக்கள் அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீசிய சுழல் காற்று மற்றும் அடைமழை காரணமாக 57 குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் பத்துக்குடும்பங்களின் தற்காலிக வீடுகளும் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

குழந்தைகள், வயோதிபர்கள், நோயாளர்கள் ஆகியோருக்கு விசேட வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டிய நிலையில் இன்னும் அவர்கள்; பொதுநோக்கு மண்டபத்திலேயே தமது வாழ்க்கையை கழிக்கவேண்டிய அவலம் தொடர்கிறது. 57 குடும்பங்களுக்கும் சிறிய பொதுநோக்கு மண்டபம் உறங்குவதற்குக்கூடப் போதுமானதாக இல்லை.

அதனைவிடவும் அவர்களின் உணவுத் தேவை என்பதும் மிகவும் நெருக்கடியானதாகவே அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த மக்களுக்கு உடனடியான உணவுத்தேவைகளை நிறைவு செய்தவதற்கு பொது அமைப்புக்களும் தொண்டு நிறுவனங்களும் முன்வரவேண்டும்' என்று சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

'இந்தக்கிராம மக்களுக்கு நிரந்தவீடுகள் இதுவரையில் கிடைக்காமல் போனமைக்கு அரசியல் பழிவாங்கலே காரணம் என்று தெரியவந்திருக்கிறது.

அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகளில் கைவைக்கும் வங்குரோத்து அரசியலில் ஈடுபடுபவர்களின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குவதை விடுத்து அரச அதிகாரிகள் நீதியை நோக்கி தமது பணியினை முன்னெடுக்கவேண்டும்.

இந்த மக்களின் வீட்டுத்திட்டத்தினை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X