2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மர்மப்பொருள் வெடித்து சிறுவன் காயம்

Kanagaraj   / 2014 மே 18 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி திருநகர்ப் பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (18) காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

திருநகரினைச் சேர்ந்த மாணிக்கதியாகராஜா விஜயயாதவன் (12) என்ற சிறுவனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சிறுவன் வியாபார நிலையமொன்றில் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். சென்ற வீதியில் கிடந்த உருண்டை வடிவிலான இனம் தெரியாத மூன்று பொருட்களை கண்டெடுத்துள்ளார்.

அந்த மூன்று பொருட்களில் இரண்டை தனது காற்சட்டை பைகளில் வைத்ததுடன், மிகுதி ஒன்றினை கையில் வைத்து எறிந்து விளையாடியுள்ளான்.

இதன்போது, எறிந்த குறித்த பொருள் பெரும் சத்தத்துடன் வெடித்ததாகவும் இதனால் சிறுவன் படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X