2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா அடங்கிய பீடி வைத்திருந்தவருக்கு அபராதம்

Kanagaraj   / 2014 மே 19 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கஞ்சா அடங்கிய பீடிகளை கொண்ட பொதியொன்றை வைத்திருந்த நபருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் இன்று திங்கட்கிழமை (19) உத்தரவிட்டார்.

கிளிநொச்சியை சேர்ந்த குறித்த நபரை கடந்த சனிக்கிழமை(17) கிளிநொச்சி பொலிஸார் கைது செய்திருந்தனர்.

சந்தேக நபர் இன்று(19) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்ததுடன், அபராதப் பணத்தை செலுத்தத் தவறினால் 10 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X