2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் திமிங்கிலங்கள் வன்னியில் கடலட்டை அள்ளுகின்றன: சிவமோகன்

Menaka Mookandi   / 2014 ஜூன் 11 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

அரசியல் திமிங்கலங்கள் சில வன்னிப் பிரதேசத்தில் கடலட்டையை அள்ளிவருகின்ற என வட மாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு பிரதேசத்தில் மீனவர்கள் எதீர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர் இன்று புதன்கிழமை (11) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாத்தளன் முதல் சாலை கடற்கரை அடங்கிய பிரதேசத்தில் இராணுவத்தின் ஆதரவுடன் அரச சார்பு முதலாளிகள் கடலட்டை பிடிக்கும் கடல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி பிரதேசத்திற்கு தமிழ் மக்கள் செல்ல முடியாதபடி இராணுவ தடை முகாம் இடப்பட்டுள்ளது. இவர்கள் இரவு நேரங்களில் ஒளியூட்டி ஒட்சிசன் சிலிண்டர்களின் உதவியுடன் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லை மாவட்ட கரையோர மீனவர்கள் என்னிடம் தெரிவிக்கின்றனர்.

இரவில் ஒளியூட்டி கடலட்டை தொழிலில் ஈடுபடுபவர்களால் மீன்கள் ஆள்கடலை தாண்டி கரையோரம் வருவதில்லை எனவும் இதனால் தமது நாளாந்த மீன்பிடி தொழில் பத்து மடங்கு குறைவடைந்து 30 கிலோவில் இருந்து 3 கிலோ வரை குறைந்து விட்டதாக மக்கள் அங்கலாய்கின்றனர்.

மேலும் கடலட்டை அள்ளும் கூட்டம் சங்குகளையும் அள்ளிவருவதால் ஆள்கடலில் இருந்து சங்குகளில் இருக்கும் கடலின தாவர வகைகளை உண்ண வரும் மீனினம் கரை வருவதில்லை. இதனாலும் தமது மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லை மாவட்ட மீனவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

கடலட்டை அள்ளுவது சட்டவிரோதம் என்பது நாம் அறிந்ததே, இதற்குரிய அனுமதி பத்திரம் கடலட்டை அள்ளுபவர்களிடம் உள்ளதா? நாம் அறியோம்.

அப்படி அனுமதி பத்திரம் வழங்குவதாயினும் எமது வன்னி பிரதேச மீனவர்களுக்கல்லவா அந்த உரிமை உள்ளது. போரால் நொந்து நூலாகியிருக்கும் அவர்களை சுரண்டி வாழ்வதில் இந்த அரசியல் திமிங்கிலங்களிற்கு எவ்வளவு சந்தோசம்' என அவ்வறிக்கையில் மேலும் எனவும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X