2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வீதி ஒழுங்கை மீறியவர்களுக்குத் தண்டம்

Kogilavani   / 2014 ஜூன் 26 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் வீதி ஒழுங்குகளை மீறி நடந்த இருவருக்கு 7500 ரூபா தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாகப்தீன் வியாழக்கிழமை (26) உத்தரவிட்டார்.

வரி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப் பத்திரம் ஆகியன இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய நபருக்கு 6500 ரூபாவும், இரவில் மின்விளக்கின்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியவருக்கு 1000 ரூபாவும் தண்டம் விதித்தார்.

மேற்படி இருநபர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை (24) பூநகரிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நபர்களுக்கெதிராக பூநகரிப் பொலிஸார் கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். இவ்வழக்கு வியாழக்கிழமை (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X