2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கள் வைத்திருந்தவர்களுக்குத் தண்டம்

Kogilavani   / 2014 ஜூன் 26 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பூநகரிப் பகுதியில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலதிகமாக கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த வாரம் பிடிப்பட்ட 18 பேரில் 15 பேருக்கு  தலா 1000 ரூபா தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாகப்தீன் வியாழக்கிழமை (26) உத்தரவிட்டார்.

இதேவேளை, மன்றிற்குச் சமூகமளிக்காத ஏனைய மூவருக்கும் எதிராக நீதவான் பிடியாணையையும் பிறப்பித்தார்.

கிளிநொச்சி மதுவரித் திணைக்களத்தினரால் மேற்படி 18 பேரும் கடந்த வாரம் பிடிக்கப்பட்டதுடன், கிளிநொச்சி நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு வியாழக்கிழமை (26) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் மேற்படி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X