2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மடு அன்னையின் ஜுலை திருவிழா நாளை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 01 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மடு அன்னையின் ஜுலை மாத திருவிழா நாளை புதன்கிழமை (2) நடைபெறவுள்ள நிலையில் பக்தர்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து, பாதுகாப்பு, சுகாதாரம், குடிநீர் வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மடுத்திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியான்ஸ்பிள்ளை தெரிவித்தார்.

மடுதிருத்தலத்தின் ஆடி மாத திருவிழா கடந்த  23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு வந்தன.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை தலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசேப் ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியாக நாளையதினம் காலை 6.15 மணிக்கு மடுத்திருநாள் திருப்பலியை ஒப்புக்கொடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். 

மேலும், இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.15 மணிக்கு நற்கருணை ஆராதனை நடைபெறவுள்ளது.

இதேவேளை, இத்திருவிழாவை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் கொழும்பிலிருந்து மடுத்திருத்தலத்துக்கு  விசேட புகையிரத சேவைகளும் இடம்பெறவுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X