2025 ஜூலை 19, சனிக்கிழமை

டிப்பர் ரக வாகன சாரதி விளக்கமறியலில்

Menaka Mookandi   / 2014 ஜூலை 16 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பரந்தன் - முல்லைத்தீவு (ஏ – 35) வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர்களை மோதிய டிப்பர் ரக வாகன சாரதியினை எதிர்வரும் 30ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாகப்தீன் இன்று புதன்கிழமை (16) உத்தரவிட்டார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற மேற்படி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தெல்லிப்பளை, வசாவிளான் பகுதியைச் சேர்ந்த  எஸ்.சண்முகநாதன் என்பவர் உயிரிழந்ததுடன், அவருடைய மகனான 27 வயதுடைய சண்முகநாதன் பிரதீபன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார், விபத்தினை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் டிப்பர் ரக வாகனத்தின் சாரதியினைக் நேற்று செவ்வாய்க்கிழமை (15) கைது செய்திருந்தனர்.

தொடர்ந்து, சாரதியினை இன்று புதன்கிழமை (16) கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய வேளையிலேயே. நீதவான் சாரதியினை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X