2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்குள் கொரோனா

Freelancer   / 2022 ஜனவரி 25 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெண் உத்தியோகத்தர் ஒருவரும், இரண்டு ஆண் உத்தியோகத்தர்களுக்குமே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் கொரோனா தடுப்பு பிரிவு விடுதியில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .