2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தாமதமாக வந்த மணமகனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி

Ilango Bharathy   / 2022 மே 04 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில் மல்காப்பூர் பங்கரா கிராமத்தில் கடந்த 22ஆம் திகதி மாலை 4 மணியளவில் திருமணமொன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் அன்றைய தினம், மணமகன் மாலை 4 மணி ஆகியும்  திருமணத்திற்கு வருகை தரவில்லை எனக் கூறப்படுகின்றது.இதனால் மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மணமகனின் வருகைக்காக திருமண மண்டபத்தில் காத்திருந்துள்ளனர்.



இந்நிலையில் மணி 4, 5 என 8 ஐ எட்டியும்  மணமகன் திருமண மண்டபத்திற்கு வருகை  தராததால் மணமகள் குடும்பத்தினர் பொறுமையிழந்து காணப்பட்டனர்.

அதே சமயம் மணமகன் தனது வீட்டில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் 8 மணிக்குப் பின்னர்  மண்டபத்திற்கு தனது நண்பர்கள் பட்டாளத்துடன் மணமகன் வருகை தரவே  இருவீட்டாருக்கும் இடையே வாக்குவாதம்  ஏற்பட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த மணமகளின் தந்தை, தனது மகளை குறித்த நபருக்கு திருமணம் செய்து வைக்க மறுத்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன்  திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில், திருமணத்திற்கு வந்த உறவுக்காரர் ஒருவரிடம் ஆலோசனை நடத்தி அவருக்கே தனது மகளை மணமுடித்து வைத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .