2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

10 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது

Freelancer   / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட் 

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு கிராம பகுதியில் 10 கிலோ 370 கிராம் எடை கொண்ட கஞ்சா பொதிகளை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், தாழ்வுபாடு கிராம பகுதியில்  குறித்த இளைஞர் சனிக்கிழமை (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விதானகே, தலைமையிலான  பொலிஸ் குழுவினர் மேற்படி கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.

அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 18 வயதுடைய மன்னார் கீரி பகுதியை சேர்ந்த இளைஞரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸார், மன்னார் நீதிமன்றில் இளைஞரை ஆஜர்படுத்தவுள்ளதுடன், கஞ்சா தொகையையும் கையளிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .