2024 மார்ச் 28, வியாழக்கிழமை

2ஆம் குறுக்கு தெரு முடக்கப்பட்டது

Niroshini   / 2021 ஜூலை 11 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

பருத்தித்துறை - இரண்டாம் குறுக்கு தெரு பகுதி, இன்று (11) காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில், நேற்று (10) எழுமாறாக 60 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில், 23 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.

இதையடுத்து, பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியால், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு, இப்பகுதியை தனிமைப்படுத்துமாறு; கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைக்கமைய, பருத்தித்துறை - இரண்டாம் குறுக்குத் தெருவில் 53 குடும்பங்களை உள்ளடக்கிய பகுதி, இன்று (11)  காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X