2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘இன்னும் மறு அழைப்பு கிடைக்கவில்லை’

Niroshini   / 2021 ஜூலை 11 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் ஐனாதிபதிக்கும் இடையில் விரைவில் சந்திப்பு நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தும் அதற்கான மறு அழைப்பு இன்னமும் கிடைக்கவில்லை என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

அண்மையில், யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரனிடம்,  ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் அத்தகைய சந்திப்புகள் இடம்பெறுமா என ஊடகவிலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .