2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Nirosh   / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் குளத்தின் கரையோர பகுதியில்  இரகசியமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. 

இதன்போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 14 பெரல்களில் கசிப்பு உற்பத்திக்கு தயாரான நிலையில் காணப்பட்ட 1,620 லீற்றர்  கோடா, கசிப்பு என்பன விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் பல பகுதிகளுக்கு கசிப்பை விநியோகித்து வந்தவர் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X