2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சனியன்று மாபெரும் போராட்டம்

Niroshini   / 2021 ஜூலை 07 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடங்களை முன்வைத்து, யாழ். பிரதான பஸ் நிலையத்துக்கு முன்னால், சனிக்கிழமையன்று (10) காலை 9.30 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புகள், விவசாய சம்மேளனங்கள், மீனவர் சங்கங்கள், இளைஞர் அமைப்புகள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், சமூக நலன்விரும்பிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இதில் பற்கேற்றகவுள்ளனர்.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெறவுள்ள இந்தப் போராட்டத்தில், அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு இதன் ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வட பிராந்திய செயலாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினருமான தோழர் செல்வம் கதிர்காமநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .