Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஜூலை 07 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
சாவற்காடு கிராம அலுவலர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து, விரைவில் விடுவிக்கப்படுமென எதிர்பார்ப்பதாக, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட தம்பாட்டி கிராமம், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவற்காடு கிராம அலுவலர் பிரிவு, காரைநகர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள், கரவெட்டியில் ஒரு கிராமம், குருநகரில் இரண்டு கிராம அலுவலகர் பிரிவு என தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன எனவும் அதில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவற்காடு கிராம அலுவலர் பிரிவு விரைவில் விடுவிக்கப்படுமென எதிர்பார்க்கிறோமெனவும் கூறினார்.
அத்துடன், முன்களப் பணியாளர்களுக்கும் இந்த வாரத்துக்குள் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன எனத் தெரிவித்த அவர், எல்லா முன்களப் பணியாளர்களும் தடுப்பூசி போடும் செயற்பாட்டுக்கு உள்வாங்கப்படுவார்கள் எனவும் அதேநேரத்தில், அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கும் அடுத்த கட்டத்தில் தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும் கூறினார்.
மேலும், இரண்டாம் கட்டத்துக்கான முதலாவது தடுப்பூசி முடிவடைந்ததும், மேலும் ஒரு தொகுதி தடுப்பூசி யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என்றும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago
8 hours ago