2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தனிமைப்படுத்தல் மையத்துக்கு மதுபானம் கொண்டு சென்றவர்களுக்கு விளக்கமறியல்

Niroshini   / 2021 ஜூலை 18 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

வட்டுக்கோட்டை தனிமைப்படுத்தல் மையத்துக்கு, மதுபானத்துடன் சென்ற இருவரை, மல்லாகம் நீதிமன்றம் தனிமைப்படுத்தலுடன் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்துள்ளது.

வட்டுக்கோட்டை கொரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு, வெள்ளிக்கிழமையன்று (16), மதுபானம் வழங்குவதற்காக இருவர் சென்றுள்ளனர்.

இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டு, நேற்றைய தினம் (17) மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே,   நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .