2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மன்னார் மாவட்ட மக்களுக்கு விசேட அறிவித்தல்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 22 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.றொசேரியன் லெம்பட் 
 
மன்னார் மாவட்டத்தில் இது வரை எந்த ஒரு கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு  இன்று (22) காலை தொடக்கம்  மன்னார் எழுத்தூர் பாடசாலையில் சினோபார்ம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள்  இடம் பெற்று வருகின்றன.

அந்தவகையில் கடந்த மாதம் சினோபார்ம் தடுப்பூசியில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் இன்று இரண்டாவது  தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது வரை மன்னார் மாவட்டத்தில் 83 வீதமானவர்கள் கொரோனாத் தடுப்பூசிகளில் இரண்டு ஊசிகளையும், 68 சதவீதமானவர்கள் முதல் முதலாவது  தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .