2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விபத்தில் உயிரிழந்த இளைஞருக்கு கொரோனா

Editorial   / 2021 செப்டெம்பர் 08 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா ஈரட்டை பகுதியில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 28 வயதான இளைஞன், நேற்று முன்தினம் மரணமடைந்திருந்தார்.

குறித்த இளைஞனின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது. சடலத்தில் இருந்து பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

அதன் முடிவுகளின் பிரகாரம் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அவரது சடலத்தை எரியூட்டுவதற்கான நடவடிக்கையை சுகாதார தரப்பினர் முன்னெடுத்துவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .