2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றியவர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 மார்ச் 29 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பள்ளக்காட்டுப் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 02 நபர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதம் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி இன்று செவ்வாய்க்கிழமை விதித்துள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸாரால் குறித்த நபர்கள் சனிக்கிழமை (26) கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த நபர்களை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் இன்று (29) ஆஜர்செய்தபோது இரு நபர்களுக்கும் தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .