2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாவனையாளர் சட்டத்தை மீறிய 17 வர்த்தகர்களுக்கு அபராதம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்டத்தில் பாவனையாளர் சட்டத்தை மீறும் வகையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 17 வர்த்தகர்களுக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிவான் ரூபா 21,000 தண்டப்பணம் வித்தித்து தீர்ப்பளித்தார்.

அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவலக அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது பாவனையாளர் சட்டங்களை மீறும் வகையில் விலைப்பட்டியலை காட்சிப்படுத்த தவறியமை, குறித்த விலைக்கு அதிமான விலையில் பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை அகற்றாமல் வைத்திருந்தமை போன்ற குற்றங்களின் பேரில் இவர்கள்  நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஆலையடிவேம்பு, இறக்காமம், வரிப்பத்தான்சேனை போன்ற பிரதேசங்களை சேர்ந்த வியாபாரிகளே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .