2024 மே 09, வியாழக்கிழமை

இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 09 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

'2020ஆம் ஆண்டு இலங்கையில் யாவருக்கும் பார்வை' என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு  நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு '2020ஆம் ஆண்டு இலங்கையில் யாவருக்கும் பார்வை' எனும் திட்டத்தின் கீழ்   சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் தெரிவு செய்யப்பட்ட  பாடசாலையின் 57 மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகாவித்தியாலயத்திலும் கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரியிலும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஸஹிலா இஸ்ஸதீன் பொதுசுகாதார பரிசோதகர்களான எம்.என்.எம்.பைலான், சீ.பி.எம்.ஹனீபா உட்பட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Saleem Ramees Thursday, 09 June 2011 03:08 PM

    appo இப்போ ஒருத்தருக்கும் கண் தெரியாதா??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X