2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

லொறி-முச்சக்கரவண்டி மோதி விபத்து: மூவர் காயம்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அஷ்ரப்கான்

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் லொறியொன்றும் நேருக்க நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதியும் அதில் பயணம்செய்த சிறுமியும் முதியவருமே இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவர், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .